கோடிக்கு ஈஸ்வரர்கள் பெரிதாக வருந்தாமல் சோதித்து கதிசேர்க்குமாம்
ஏழைக்கு வருதுயரை வேடிக்கை பார்பததன் வாடிக்கை விளையாடலாம்
நேர்கின்ற நேர்வெலாம் நேர்விக்கும் நாயகம் போர்கூட அதனின்செயலாம்
பரணிகள் போற்றிடும் உயிர்கொல்லி மன்னர்க்கு தரணிதந்தது காக்குமாம்
நானூறு லட்சத்தில் ஒருவிந்தை உயிர்தேற்றி அல்குலின் சினைசேர்க்குமாம்
அசுரரை பிளந்தபோல் அணுவையும் பிளந்தது அணுகுண்டு ஸ்தெய்வித்ததும்
பரதேசம் வாழ்கின்ற அப்பாவி மனிதரை பலகாரம் செய்துண்டதும்
பிள்ளையின் கறியுண்டு நம்பினார் கருளிடும் பரிவான பரபிரம்மமே
ஏழைக்கு வருதுயரை வேடிக்கை பார்பததன் வாடிக்கை விளையாடலாம்
நேர்கின்ற நேர்வெலாம் நேர்விக்கும் நாயகம் போர்கூட அதனின்செயலாம்
பரணிகள் போற்றிடும் உயிர்கொல்லி மன்னர்க்கு தரணிதந்தது காக்குமாம்
நானூறு லட்சத்தில் ஒருவிந்தை உயிர்தேற்றி அல்குலின் சினைசேர்க்குமாம்
அசுரரை பிளந்தபோல் அணுவையும் பிளந்தது அணுகுண்டு ஸ்தெய்வித்ததும்
பரதேசம் வாழ்கின்ற அப்பாவி மனிதரை பலகாரம் செய்துண்டதும்
பிள்ளையின் கறியுண்டு நம்பினார் கருளிடும் பரிவான பரபிரம்மமே
உற்றாரும் உறவினரும் கற்று கற்பித்தவரன் உளமாற தொழுசத்தியை
மற்றவர் வைய்யுபயம் கொண்டுநீ போற்றிடு அற்றதையுண் டென்றுகொள்
ஆகமக்குல மூழ்கி மும்மலம் கழியறிவை ஆத்திகச் சலவையும் செய்
கொட்டடித்துப் போற்று மணியடித்துப் போற்று கற்பூர ஆரத்தியை
தைய்யடா ஊசியிற் தையெனத் தந்தபின் தக்கதை தைய்யாதிரு
உய்திடும் மெய்வழி உதாசினித்தபின் நைவதே நன்றெனின் நை !
மற்றவர் வைய்யுபயம் கொண்டுநீ போற்றிடு அற்றதையுண் டென்றுகொள்
ஆகமக்குல மூழ்கி மும்மலம் கழியறிவை ஆத்திகச் சலவையும் செய்
கொட்டடித்துப் போற்று மணியடித்துப் போற்று கற்பூர ஆரத்தியை
தைய்யடா ஊசியிற் தையெனத் தந்தபின் தக்கதை தைய்யாதிரு
உய்திடும் மெய்வழி உதாசினித்தபின் நைவதே நன்றெனின் நை !
Your parents, relatives and teachers are teaching you about god as per
their belief. You started worship GOD because of the fear these people
made in you. So you believe GOD???
After shown the right path for think, don't shut your thoughts. If you
want to skip the right way and prefer to be crushed, be crushed.
Source: https://www.youtube.com/watch?v=k-nYPech9-k
கிரகனாதி கிரகனங்கட்கப் பாலுமேயொரு ஹசஹாய சத்தி உண்டாம்
ஆளுக்கு ஆளொரு பொழிப்புரை கிறுக்கியுமா ருக்கும் விளங்காததாம்
அதைப் பயர்ந்ததையு ணர்ந்ததை துதிப்பதுவன்றி பெரிதேதும் வழியில்லையாம்
நாம்செய்த வினையெலா முன்செய்த தென்றது விதியொன்று செய்வித்ததாம்
அதைவெல்ல முனைவோரை சதிகூட செய்தது அன்போடு ஊழ் சேர்க்குமாம்
குருடாக செவிடாக மலடாக முடமாக கருசேர்க்கும் திருமூலமாம்
குஷ்டகுஹ்யம் புற்றுசூளை மூலம் என்ற க்ருரங்களதன் சித்தமாம்
புண்ணில் வாழும் புழுபுண்ணியம் செய்திடின் புதுஜென்மம் தந்தருள்மாம்