ஞாயிறு, 20 ஜனவரி, 2013

"குட்டீம்மா"

"குட்டீம்மா" - நேற்று 20-01-2012 "ஏ.வி.எம்" குறும்பட வெள்ளோட்ட திரையரங்கு இதுவரை காணாத ரசிகர்கள் வெள்ளத்தில் திகைத்தது என்றே கூறலாம். மேலும் இந்த குறும்பட வெள்ளோட்டத்திற்கு வந்திருந்த ரசிகர்களில், இன்றைய திரையுலகின் முக்கிய பிரபலங்கள் முன்னணி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், 2012 -இன் அறிமுக வெற்றி இயக்குனர் பாலாஜி தருனீதரன் , 2012-இல் இரண்டு வெற்றி படங்களில் நடித்த கதாநாயன் விஜய் சேதுபதி மற்றும் நடிகர் சிபிராஜ் போன்றவர்கள் கலந்துகொண்டு பெருமை சேர்த்தது "குட்டீம்மா" குழுவினருக்கு கூடுதல் மகிழ்ச்சி.

"குட்டீம்மா " - இதனை ஒரு முழுமையான திரைப்படம் என்றே கூறலாம். அந்த அளவிற்கு கதை, நடிப்பு, நகைச்சுவை, காதல், இசை, பாடல், வசனம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, தயாரிப்பு என்று அனைத்திலும் ஒரு முழுமையினை கொண்டுவந்திருக்கிறார் இயக்குனர் கணேஷ் குமார். இந்த குறும்படத்தில் நான் ரசித்த வசனம், படத்தில் வரும் "குட்டீம்மா" என்ற பாட்டி, கைபேசியில் முகநூலில் மூழ்கி இருக்கும் தனது பேரனிடம் 'என்னப்பா பண்ற' என்று கேட்பார்.... அதற்கு பேரன் 'ம்ம்... FACEBOOK-ல உலகத்துல இருக்குற எல்லார்கிட்டேயும் பேசிகிட்டு இருக்கிறேன்" என்று வெறுப்புடன் கூறுவான். அதற்கு அந்த பாட்டி 'ஏன்பா.... உலகத்துல இருக்குற எல்லோரிடமும் பேசுவ... உன் பக்கத்துல இருக்குற உன் பாட்டிகிட்ட பேச மாட்டியா..?" என்று கேட்பது முகநூல் மட்டும்தான் உலகம் என்று இருப்பவர்களுக்கு சாட்டையடி.

"கணேஷ் குமார் நீங்கள் குறும்படம் எடுத்தது போதும், வெள்ளித்திரையில் விளையாடி வெற்றி காண வாருங்கள்" என்று ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள் மனதார வாழ்த்தி அழைத்த வார்த்தைகளுக்கு அவ்வளவு திறம்பட உழைத்திருக்கின்றனர் "குட்டீம்மா" குழுவினர்கள். இவர்கள் அனைவரும் உண்மையிலேயே "GOOD TEAM MAA" 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக