திங்கள், 10 டிசம்பர், 2012

வெற்றி மந்திரம்: வலி என்பது நிரந்தரமல்ல

வெற்றி மந்திரம்: வலி என்பது நிரந்தரமல்ல...

ஆஸ்திரேலியா நாட்டின் மெல்பர்ன் நகரத்தில், அந்த இளம் கிறிஸ்தவத் தம்பதியர் தனது முதல் குழந்தையின் வரவுக்காக ஆயிரமாயிரம் கனவுகளோடும், கற்பனைகளோடும் காத்துக் கிடந்தனர். 1982ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 4ம் நாள் அதிகாலைப் பொழுதில் கடவுள் ஒரு அழகான ஆண் குழந்தையைக் கொடுத்தார்.

இந்தப் பூவுலகில் புதுப்பிறவி எடுத்த தன் மகனை தந்தை அள்ளி முத்தமிட எத்தனித்தார். அப்போ

துதான் தனது பிஞ்சு மகனின் கால்களும், கைகளும் முழு வளர்ச்சி இல்லாமல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றார்.

எந்த மருத்துவக் காரணங்களுமே சொல்ல முடியாத ஒரு விநோதமான பிறவியெடுத்த அந்த பாக்யசாலி ‘நிக் விய்ஜெசிக்’.

கையும், காலும் ஏன் விரல்கள் கூட சரியாக இல்லாத ஒரு குழந்தையை அந்த பெற்றோர் வளர்த்தெடுக்கப்பட்ட வேதனைகள்... அவமானங்கள் தான் எத்தனைÐ எத்தனைÐÐ சில வலிகள் அனுபவித்துப் பார்த்தால் மட்டுமே விளக்கக்கூடியது. நிக் நெடுநாள் பிழைக்க மாட்டார் என்றே அந்தப் பெற்றோர் மனதுக்குள் நினைத்துக் கொண்டிருந்தார்கள்

ஆனால் உடலில் மருத்துவ ரீதியாக வேறு எந்த குறைபாடும் இல்லை என்றதும் பெற்றோர் மனதில் ஒரு சந்தோஷ ஒளி தென்பட்டது.

குறைபாடுள்ள குழந்தையைக் கண்டு ஆரம்பத்தில் அழுது புலம்பிய பெற்றோருக்கு, அப்போது தன்னம்பிக்கையும், தளராத தைரியமும் வளர்ந்திருந்தது.

உடலளவில் குறைபாடு உள்ளவன் என்பதாலும், உருவத்தில் வித்தியாசப்பட்டு இருந்த காரணத்தாலும் ஆஸ்திரேலிய அரசு எல்லாக் குழந்தைகளோடும் சேர்ந்து படிக்க நிக்கை அனுமதிக்கவில்லை.

அவனது தாயார் நிராகரிப்பை எதிர்த்துப் போராடத் தொடங்கினார். அரசுடன் யுத்தம் ஒன்றையே நடத்தி, அதில் ஒரு வழியாக வெற்றியும் பெற்றார்.

அனைவரும் சேர்ந்து படிக்கும் பள்ளியில் நிக் சேர்க்கப்பட்டார் என்றாலும் அனைத்து மாணவர்களாலும் நிராகரிக்கப்பட்டார்; கேலி பேசப்பட்டார்.

சக வயதுடையவர்களுடன் பழகினால் மன அழுத்தமே அதிகமாகுமென்று வயது குறைந்த குழந்தைகளோடு நிக் பழக வைக்கப்பட்டார். அது அவர் வாழ்க்கையையே மாற்றியது. ஆம், குழந்தைகள் அவனது பேச்சுக்கு மதி மயங்கி நின்றனர். பேசி... பேசி... உலகையே மாற்றும் அளவிற்கு ஒரு மாபெரும் பேச்சாளராக மாறினார். ஆம், இன்று ஒரு சாதனை மனிதனாக தன்னம்பிக்கை சொற்பொழிவு ஆற்றும் சாதனையாளராக மாறியிருக்கிறார் நிக்.

நிக்கிடம் கை, கால்கள் மற்றும் விரல்கள் இல்லையே ஒழிய வேறென்ன இல்லை. உள்ளத்தளவில் உலகில் உள்ள அனைத்து மக்களைப் போற்றும் அனைத்து உணர்வுகளும் உள்ள ஒரு சராசரி மனிதன் தான்.

நிக் பேசுவதை நீங்களும் கேட்டுப் பாருங்களேன். “எனக்கு இப்போது வயது 26. 15வது வயதில் பைபிளில் ஒரு வசனம் படித்தேன். ‘கடவுளானவர் இந்த உலகுக்குச் செய்ய வேண்டியதை ஒரு கண்ணிழந்தவன் மூலமாகவோ அல்லது என்னைப் போன்ற ஒரு அசாதாரணப் பிறவி மூலமாகவோ தான் செவ்வனே செய்து முடிக்கிறார்’ என்பதை உணர்ந்து கொண்டேன்.

நான் அந்த பாக்கியம் பெற்றுவிட்ட ஒரு பிறவியாகவே நினைத்து பெருமிதம் கொண்டேன். என் வாழ்க்கையை நான் இந்த உலகத்துக்காக ஒப்புக் கொடுத்துவிட்டேன்.

முதலில் நான் பொருளாதாரத் தன்னிறைவு பெற்றுவிடுவேன். நான் சேவை செய்வதற்கு நானே என் சொந்தச் சம்பாத்தியத்தில் நிற்பேன். எந்த உதவியையும் நான் பிறரிடமிருந்து எதிர்பாராது, ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லக்கூட எனக்கென்று ஒரு வாகனமும், அதை நானே ஓட்டும் படியும் அமைத்துக் கொள்வேன்’.

நான் ஒரு சுயமுன்னேற்றப் பேச்சாளன். பல நிறுவனங்களில் என்னைச் சிறப்பு பேச்சாளராக அழைத்துப் பேச வைத்திருக்கிறார்கள். எனது வாழ்க்கையின் சுவாரஸ்யங்களையும், சாதனைகளையும், கடந்து வந்த பாதைகளையும் பேசி முடிக்கும்போது அவர்களின் மனதில் இருக்கும் தாழ்வு மனப்பான்மைகள் தரைமட்டமாவதை கண்கூடாகப் பார்த்து பிரமித்துப் போயிருக்கிறேன்.

என் சொற்பொழிவு இந்த உலகம் முழுவதும் ஒலிக்கப்பட வேண்டும். என் வாழ்க்கை முழுவதும் ஏழை, எளிய மக்களும், மனதால் ஊனப்பட்டு, மன அழுத்தத்தால் வாடி, தவறான பாதைகளில் போதை பழக்கங்களுக்கு அடிமையாகி, எதிர்காலம் இருண்டு நிற்கும் ஒவ்வொருவருக்கும் நான் சேவை செய்வதற்காகக் காத்திருக்கிறேன். இவை தான் என் கனவு, லட்சியம், ஆத்ம திருப்தி எல்லாமே. நான் பிறந்த பலனை முழுமையாக உணர்கிறேன். இவற்றோடு நான் கை இல்லை, கால் இல்லை, கவலை இல்லை’ என்ற நூலும் எழுதியிருக்கிறேன்.

கடவுளின் படைப்புகள் எப்போதுமே வீணடிக்கப்படுவதில்லை. துயரமான நேரங்கள் உருவாவதில்லை. உருவாக்கப்படுகின்றன. எதையும் சரியான கண்ணோட்டத்தில் பாருங்கள். வலி என்பது நிரந்தரம் அல்ல. வாழ்க்கை தான் நிரந்தரம்.


நமது வாழ்க்கை என்பது பாலைவனத்தில் பயன்படும் சிறிது நேரச் செருப்பு, அதனை பயனுள்ளதாக வாழ்வோமே. அவமானங்களை, வேதனைகளை தூக்கியெறியுங்கள். நேற்றைய நிகழ்வுகளைச் சந்தித்தவன் நான் இல்லை. அவன் வேறொருவன் என்று நினைத்து ஒவ்வொரு நாளும் காலை எழும்போது புதிதாகப் பிறந்ததாய் எண்ணிப் புதுப்பயணத்தை தொடருங்கள்.

உங்களிடம் என்ன இருக்கிறதோ அதை நம்புங்கள். அதில் கவனம் செலுத்துங்கள். வெற்றியடைவீர்கள். என்ன திறமை இருக்கிறதெனத் தேடிப் பார்க்காதீர்கள். உங்கள் திறமையில் நம்பிக்கை வைப்பதைவிட, தேவையில் நம்பிக்கை வையுங்கள். அதை எளிதில் அடைவீர்கள். நீங்கள் ஏதாவது சாதிக்க நினைத்தால் அதற்காகத்தான் உங்களை கடவுள் இங்கே அனுப்பியிருக்கிறார் என்றே நம்புங்கள்.

நான் இப்படியொரு ஊனமாகப் பிறந்ததற்குப் பெருமைப்படுகிறேன். காரணம் எனது வாழ்க்கையை இந்த உலகத்தோடு பகிர்ந்து கொள்வதன் மூலம் எத்தனையோ சகோதர சகோதரிகளை மனதளவில் நல்வழிப்படுத்தியிருக்கிறேன். என் உருவத்தை என்னால் மாற்ற முடியாது.

ஆனால் இந்த உலகத்தில் மனதளவில் ஊனப்பட்ட எத்தனையோ பரிதாபத்திற்குரிய என் தோழமைக்கு உரியவர்களை மாற்றியிருக்கிறேன். மறுவாழ்வு வாழ வைத்திருக்கிறேன். எல்லோரையும் மாற்ற முடியாது. அதனால் சிலரையாவது மாற்ற முயல்கிறேன். உங்களை என்னால் மாற்ற முடியும்”.


நிக்கின் தன்னம்பிக்கை வார்த்தைகளை கேட்டீர்களா, இவரது வாழ்க்கையை விட வேறு தன்னம்பிக்கைப் பாடம் வேண்டுமா என்ன? இவரைவிட வலியை உணர்ந்தவரும், அந்த வலியில் இருந்த மீண்டவரும் எவரும் உண்டா? இவரது சோகங்களுக்கு முன்னே மனிதகுலத்தின் சோகம் தூசு தானே...

செவ்வாய், 4 டிசம்பர், 2012

கொஞ்சம் சிரிப்பு

மாணவன் 1 : நம்ம தமிழ் வாத்தியாரை யாரோ அடிச்சுட்டாங்களாமே?

மாணவன் 2 : யாரோ இங்கே தமிழாசிரியர் யாரு ??? என்று கேட்டதுக்கு அடியேன்!!அடியேன்!! என்று பதில் சொல்லியிருக்காரு அதுதான் !?!?

ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ..


________________________________________________________________________________

ஆப்பிள் அழுது கொண்டு இருக்கிறது

வாழைப்பழம்: ஏன் அழுகிறாய்?

ஆப்பிள்: எல்லாரும் என்னை கட் பண்ணி சாப்பிடுறாங்க!!

வாழைப்பழம்: நீ பரவாயில்லை. என்னை எல்லாரும் என்னோட
டிரஸ்ஸ அவிழ்த்துவிட்டு சாப்பிடுறாங்க!!


_______________________________________________________________________________

நர்ஸ் : டாக்டர் இரண்டு தடவை மயக்க ஊசி போட்டும் மயங்கி விழலை.

டாக்டர் : ஊசியோட விலையைச் சொல்லு. உடனே மயங்கி விழுந்து விடுவார்.


_______________________________________________________________________________

மனைவி: என்னங்க நான் செத்துப்போயிட்டா… என்ன பண்ணுவீங்க?

கணவன்: எனக்கு பைத்தியமே புடிச்சுரும்!

மனைவி: நான் செத்தா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா?

கணவன்: பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும்!!

ஹி ஹி ஹி ஹி ஹி ஹீ ..


______________________________________________________________________________

கணவன்: எனக்கு operation முடிஞ்சபின் ஏதாச்சும் ஆச்சுனா நீ doctorஐ கல்யாணம் பண்ணிக்கோ!

மனைவி: ஏங்க இப்படியெல்லாம் பேசுறீங்க?
 

 கணவன்: எனக்கு அவனை பழிவாங்க வேற வழி தெரியல!!!.............

ஹா ஹா ஹா ஹா ஹா ..
 
 
 


______________________________________________________________________________

டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு
ரொம்ப ஜாஸ்தியாம்.

இப்பவாவது தெரியுதா நான் ஏன்
ஜாதகத்தை நம்புறதில்லைன்னு???????

ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ..


______________________________________________________________________________

சசி : டாக்டர் எனக்கு 24 மணி நேரம் தூக்கம் வருது இதுக்கு அலுப்புதான் காரணமா ?
டாக்டர் : இல்ல கொழுப்பு தான் காரணம் !!

ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ..


______________________________________________________________________________

"நாங்கள் ஏழு பேர்கள் ஒரே குடையின் கீழ் நடந்து சென்றோம். ஆனால், ஒருவர்கூட நனையவில்லை." "அதெப்படி?"
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
."மழையே பெய்யவில்லையே"!

ஹி ஹி ஹி ஹி ஹி ஹீ ..
_______________________________________________________________________________
நீதிபதி : உன் கடைசி ஆசை என்ன ?

கைதி : ஒரு கேசுலயாவது எங்க வக்கீலு ஜெயிக்கிரத என் கண்ணால பாக்குற வரைக்கும் என்னைய தூக்குல போடாதீங்க எஜமான்..!
______________________________________________________________________________
என் மகனும் கரண்ட்டும் ஒண்ணு ..

பையன் அவ்ளோ சுறுசுறுப்பா..?

ம்ஹூம் ..

ரெண்டுமே வீட்டுல இருக்கறதில்லை..!

ஹா ஹா ஹா ஹா ஹா ..
_____________________________________________________________________________
தமிழ் டீச்சர்: அவள் நடந்து சென்றாள்.

இந்த வாக்கியத்தை ஆச்சிரியக்குறியுடன் மாற்றுங்கள் பார்ப்போம்

மாணவன்: டேய் மச்சான், figure டா!

ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ..
____________________________________________________________________________
பையன்: எனக்கு வேலை இல்லைனு தெரிஞ்சும் எப்படி நம்ம கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாங்க..

பொண்ணு: பையன் என்ன பண்ணுறான்னு கேட்டாங்க, வயத்துல உதைக்குறானு சொன்னேன்... அதான்....

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ..
________________________________________________________________________________
ஓட்டப்பந்தயத்துல கலந்துக்கப் போறேன் ..
“ ஆசீர்வாதம் பண்ணு பாட்டி. ”

பார்த்து மெதுவா ஓடிப்போ ..,
வேகமாக ஓடி கைய, கால ஓடிச்சுக்கிடாதே.!!

நம்மூர் பாட்டிங்க இப்படித்தான் ஹி ஹி ஹீ ..
_____________________________________________________________________________
பழம் நழுவி பாலில் விழுந்து டம்பளர் உடைந்து போச்சு. ஏன்?

விழுந்தது பலாப்பழம் ஆச்சே ?!

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா .. ளொள் .
_____________________________________________________________________________
ஏண்டா மெதுவா லெட்டர் எழுதுற?

எங்க அப்பாவுக்கு வேகமாக படிக்க வராது, அதான்.!

ஹ ஹ ஹ ஹ ஹ ஹ .. lolz .
____________________________________________________________________________
கணவன் : நம்ம வீட்டுக்கு வந்த திருடன புடுச்சு அடிச்சு, உதச்சு அவன் கை காலெல்லாம் முறிச்சியே, எங்கேந்து வந்தது உனக்கு இ‌வ்ளோ தைரியம்.???

மனைவி : நான் திருடன்னு நினைச்சு அடிக்கலீங்க, நீங்க தான் குடிச்சுட்டு வந்திருக்கீங்கன்னு நினைச்சுதான்.!!!

கணவன் : ?!?!?!

ஹா ஹா ஹா ஹா ஹா ..
____________________________________________________________________________
நண்பன் 1: டேய் மச்சான் நேத்து உங்க வீட்டுக்கு போய் உன்ன எங்கனு கேட்டேன் , அதுக்கு உங்க அப்பா ..

"அந்த மாடு எங்கயாச்சும் மேய போய் இருக்கும்னு சொன்னாரு " எனக்கு ரொம்ப கஸ்டமா போச்சு டா!!

நண்பன் 2: அது கூட பரவாயில்லை மாப்பிள.... நான் திரும்பி போனதும் உன்னைத் தேடி ஒரு "எருமை" வந்துச்சுனு சொன்னாருடா!!

ஹ ஹ ஹ ஹ ஹ ஹ .. lol ..
__________________________________________________________________________
"எங்கப்பா அம்மா சொன்ன பேச்சை நான் சின்ன வயசிலிருந்தே கடைப்பிடிச்சுட்டு வரேன்!"

"அப்படியா..!

சின்ன வயசுல என்ன சொன்னாங்க?

"நீ உருப்படவே மாட்டே'ன்னாங்க!"

ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ .. lolz ..
______________________________________________________________________________
நோயாளி : டாக்டர் வர வர காது சரியாவே கேட்க மாட்டேங்குது!

டாக்டர்: நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க ..
ரெண்டே நாள்ல காய்ச்சல் சரியாகிடும் ..!

ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ .. lolz .
______________________________________________________________________________
காதலி தேவை........

வருகிற ஆண்டு(2013) பெப்பரவரி 14ம் திகதி காதலர் தினத்தை கொண்டடுவதுக்கு ஒரு காதலி தேவை. அதற்காக இப்போதே காதலி தேர்வு செய்ய பட உள்ளது. விரும்பியவர்கள் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு:- அனுபவம் ஏதும் இல்லாதவர் விரும்ப தக்கது.

ஹஹஹஹஹஹஹ..................
______________________________________________________________________________
மனைவி: இந்த வீட்ல ஒண்ணு நான் இருக்கணும் இல்ல உங்க அம்மா இருக்கணும்!

கணவன் : வேலக்காரிய மட்டும் விட்டுட்டு நீங்க ரெண்டு பேரும் எங்கயாவது போயிடுங்க...

ஹி ஹி ஹி ஹி ஹி ஹீ ..
____________________________________________________________________________
ஆசிரியர்: உண்மைக்கு எதிர்பதம் என்னனு கேட்டதற்கு உங்க பையனுக்கு பதில் சொல்ல தெரியலை மேடம் !

அம்மா: அவனுக்கு பொய் சொல்லவே தெரியாது சார் !

ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ..
____________________________________________________________________________
Face Bookகும் ஜெயிலுக்கும் உள்ள ஒற்றுமை...

ரெண்டுமே தெண்டமா உக்காந்துகிட்டு Wallல எழுத வேண்டியது தான்...
____________________________________________________________________________              
நர்ஸ்: "போன்ல உங்களுக்குக் கொலை மிரட்டல் விடுறவன், ஒருவேளை நீங்க ஆபரேஷன் பண்ணுன பேஷண்ட்டுகள்ல யாராவது இருக்குமோ..?"

டாக்டர் : "எனக்குத் தெரிஞ்சு அப்படி யாரும் உயிரோட இருக்கிற மாதிரி தெரியலையே, நர்ஸ்!"


_________________________________________________________________

பெண்ணின் தகப்பனார் : மாப்பிள்ளைக்கு குழந்தை மனசுன்னு சொன்னீங்க.. அதுக்காக இப்படியா..?

தரகர்: ஏன் என்ன பண்ணினாரு?

பெண்ணின் தகப்பனார் : பொண்ணு பார்க்கும் போது 'மாமா பிஸ்கோத்து" வேணும் என்று தட்டுல வச்சிருந்த பிஸ்கட் பாக்கெட்ட கேட்குறாரு..?!?!?

 _________________________________________________________________

முடி வெட்ட வந்த வழுக்கைத் தலைக்காரர், சலூன்காரரிடம் : ஏம்பா, என் தலையிலே தான் முடி ரொம்ப கம்மியா இருக்கு இல்லே. முடி வெட்டறதுக்குப் பாதி பணம் வாங்கிக்கக் கூடாதா?

சலூன் கடைக்காரர் : உங்களுக்கு முடி வெட்டறதுக்காக நான் பணம் வாங்கலே சார். முடியைத் தேடிக் கண்டு பிடிக்கத்தான் பணம் வாங்குறேன்.

_________________________________________________________________

டாக்டர் : "எதுக்கு.. நர்ஸ் மடியில படுத்திருக்கீங்க....?"

பேஷன்ட்: "வசதிப்பட்ட இடத்துல படுத்துத் தூங்கச்சொல்லி நீங்கதானே டாக்டர் சொன்னீங்க...!"

-  அம்பை தேவா, சேரன்மகாதேவி

_________________________________________________________________

 
   

PEN DRIVE


வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!

தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.
இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை

ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.

இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.

1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.

2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.

3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.

4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும்.

◦நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.

◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும் —

உபயோகமான தகவல் என்று நினைத்தால், நண்பர்களுடன் பகிருங்கள்....