ஆஸ்திரேலியா நாட்டின் மெல்பர்ன் நகரத்தில், அந்த இளம் கிறிஸ்தவத் தம்பதியர் தனது முதல் குழந்தையின் வரவுக்காக ஆயிரமாயிரம் கனவுகளோடும், கற்பனைகளோடும் காத்துக் கிடந்தனர். 1982ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 4ம் நாள் அதிகாலைப் பொழுதில் கடவுள் ஒரு அழகான ஆண் குழந்தையைக் கொடுத்தார்.
இந்தப் பூவுலகில் புதுப்பிறவி எடுத்த தன் மகனை தந்தை அள்ளி முத்தமிட எத்தனித்தார். அப்போ
துதான் தனது பிஞ்சு மகனின் கால்களும், கைகளும் முழு வளர்ச்சி இல்லாமல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றார்.
எந்த மருத்துவக் காரணங்களுமே சொல்ல முடியாத ஒரு விநோதமான பிறவியெடுத்த அந்த பாக்யசாலி ‘நிக் விய்ஜெசிக்’.
கையும், காலும் ஏன் விரல்கள் கூட சரியாக இல்லாத ஒரு குழந்தையை அந்த பெற்றோர் வளர்த்தெடுக்கப்பட்ட வேதனைகள்... அவமானங்கள் தான் எத்தனைÐ எத்தனைÐÐ சில வலிகள் அனுபவித்துப் பார்த்தால் மட்டுமே விளக்கக்கூடியது. நிக் நெடுநாள் பிழைக்க மாட்டார் என்றே அந்தப் பெற்றோர் மனதுக்குள் நினைத்துக் கொண்டிருந்தார்கள்
ஆனால் உடலில் மருத்துவ ரீதியாக வேறு எந்த குறைபாடும் இல்லை என்றதும் பெற்றோர் மனதில் ஒரு சந்தோஷ ஒளி தென்பட்டது.
குறைபாடுள்ள குழந்தையைக் கண்டு ஆரம்பத்தில் அழுது புலம்பிய பெற்றோருக்கு, அப்போது தன்னம்பிக்கையும், தளராத தைரியமும் வளர்ந்திருந்தது.
உடலளவில் குறைபாடு உள்ளவன் என்பதாலும், உருவத்தில் வித்தியாசப்பட்டு இருந்த காரணத்தாலும் ஆஸ்திரேலிய அரசு எல்லாக் குழந்தைகளோடும் சேர்ந்து படிக்க நிக்கை அனுமதிக்கவில்லை.
அவனது தாயார் நிராகரிப்பை எதிர்த்துப் போராடத் தொடங்கினார். அரசுடன் யுத்தம் ஒன்றையே நடத்தி, அதில் ஒரு வழியாக வெற்றியும் பெற்றார்.
அனைவரும் சேர்ந்து படிக்கும் பள்ளியில் நிக் சேர்க்கப்பட்டார் என்றாலும் அனைத்து மாணவர்களாலும் நிராகரிக்கப்பட்டார்; கேலி பேசப்பட்டார்.
சக வயதுடையவர்களுடன் பழகினால் மன அழுத்தமே அதிகமாகுமென்று வயது குறைந்த குழந்தைகளோடு நிக் பழக வைக்கப்பட்டார். அது அவர் வாழ்க்கையையே மாற்றியது. ஆம், குழந்தைகள் அவனது பேச்சுக்கு மதி மயங்கி நின்றனர். பேசி... பேசி... உலகையே மாற்றும் அளவிற்கு ஒரு மாபெரும் பேச்சாளராக மாறினார். ஆம், இன்று ஒரு சாதனை மனிதனாக தன்னம்பிக்கை சொற்பொழிவு ஆற்றும் சாதனையாளராக மாறியிருக்கிறார் நிக்.
நிக்கிடம் கை, கால்கள் மற்றும் விரல்கள் இல்லையே ஒழிய வேறென்ன இல்லை. உள்ளத்தளவில் உலகில் உள்ள அனைத்து மக்களைப் போற்றும் அனைத்து உணர்வுகளும் உள்ள ஒரு சராசரி மனிதன் தான்.
நிக் பேசுவதை நீங்களும் கேட்டுப் பாருங்களேன். “எனக்கு இப்போது வயது 26. 15வது வயதில் பைபிளில் ஒரு வசனம் படித்தேன். ‘கடவுளானவர் இந்த உலகுக்குச் செய்ய வேண்டியதை ஒரு கண்ணிழந்தவன் மூலமாகவோ அல்லது என்னைப் போன்ற ஒரு அசாதாரணப் பிறவி மூலமாகவோ தான் செவ்வனே செய்து முடிக்கிறார்’ என்பதை உணர்ந்து கொண்டேன்.
நான் அந்த பாக்கியம் பெற்றுவிட்ட ஒரு பிறவியாகவே நினைத்து பெருமிதம் கொண்டேன். என் வாழ்க்கையை நான் இந்த உலகத்துக்காக ஒப்புக் கொடுத்துவிட்டேன்.
முதலில் நான் பொருளாதாரத் தன்னிறைவு பெற்றுவிடுவேன். நான் சேவை செய்வதற்கு நானே என் சொந்தச் சம்பாத்தியத்தில் நிற்பேன். எந்த உதவியையும் நான் பிறரிடமிருந்து எதிர்பாராது, ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லக்கூட எனக்கென்று ஒரு வாகனமும், அதை நானே ஓட்டும் படியும் அமைத்துக் கொள்வேன்’.
நான் ஒரு சுயமுன்னேற்றப் பேச்சாளன். பல நிறுவனங்களில் என்னைச் சிறப்பு பேச்சாளராக அழைத்துப் பேச வைத்திருக்கிறார்கள். எனது வாழ்க்கையின் சுவாரஸ்யங்களையும், சாதனைகளையும், கடந்து வந்த பாதைகளையும் பேசி முடிக்கும்போது அவர்களின் மனதில் இருக்கும் தாழ்வு மனப்பான்மைகள் தரைமட்டமாவதை கண்கூடாகப் பார்த்து பிரமித்துப் போயிருக்கிறேன்.
என் சொற்பொழிவு இந்த உலகம் முழுவதும் ஒலிக்கப்பட வேண்டும். என் வாழ்க்கை முழுவதும் ஏழை, எளிய மக்களும், மனதால் ஊனப்பட்டு, மன அழுத்தத்தால் வாடி, தவறான பாதைகளில் போதை பழக்கங்களுக்கு அடிமையாகி, எதிர்காலம் இருண்டு நிற்கும் ஒவ்வொருவருக்கும் நான் சேவை செய்வதற்காகக் காத்திருக்கிறேன். இவை தான் என் கனவு, லட்சியம், ஆத்ம திருப்தி எல்லாமே. நான் பிறந்த பலனை முழுமையாக உணர்கிறேன். இவற்றோடு நான் கை இல்லை, கால் இல்லை, கவலை இல்லை’ என்ற நூலும் எழுதியிருக்கிறேன்.
கடவுளின் படைப்புகள் எப்போதுமே வீணடிக்கப்படுவதில்லை. துயரமான நேரங்கள் உருவாவதில்லை. உருவாக்கப்படுகின்றன. எதையும் சரியான கண்ணோட்டத்தில் பாருங்கள். வலி என்பது நிரந்தரம் அல்ல. வாழ்க்கை தான் நிரந்தரம்.
எந்த மருத்துவக் காரணங்களுமே சொல்ல முடியாத ஒரு விநோதமான பிறவியெடுத்த அந்த பாக்யசாலி ‘நிக் விய்ஜெசிக்’.
கையும், காலும் ஏன் விரல்கள் கூட சரியாக இல்லாத ஒரு குழந்தையை அந்த பெற்றோர் வளர்த்தெடுக்கப்பட்ட வேதனைகள்... அவமானங்கள் தான் எத்தனைÐ எத்தனைÐÐ சில வலிகள் அனுபவித்துப் பார்த்தால் மட்டுமே விளக்கக்கூடியது. நிக் நெடுநாள் பிழைக்க மாட்டார் என்றே அந்தப் பெற்றோர் மனதுக்குள் நினைத்துக் கொண்டிருந்தார்கள்
ஆனால் உடலில் மருத்துவ ரீதியாக வேறு எந்த குறைபாடும் இல்லை என்றதும் பெற்றோர் மனதில் ஒரு சந்தோஷ ஒளி தென்பட்டது.
குறைபாடுள்ள குழந்தையைக் கண்டு ஆரம்பத்தில் அழுது புலம்பிய பெற்றோருக்கு, அப்போது தன்னம்பிக்கையும், தளராத தைரியமும் வளர்ந்திருந்தது.
உடலளவில் குறைபாடு உள்ளவன் என்பதாலும், உருவத்தில் வித்தியாசப்பட்டு இருந்த காரணத்தாலும் ஆஸ்திரேலிய அரசு எல்லாக் குழந்தைகளோடும் சேர்ந்து படிக்க நிக்கை அனுமதிக்கவில்லை.
அவனது தாயார் நிராகரிப்பை எதிர்த்துப் போராடத் தொடங்கினார். அரசுடன் யுத்தம் ஒன்றையே நடத்தி, அதில் ஒரு வழியாக வெற்றியும் பெற்றார்.
அனைவரும் சேர்ந்து படிக்கும் பள்ளியில் நிக் சேர்க்கப்பட்டார் என்றாலும் அனைத்து மாணவர்களாலும் நிராகரிக்கப்பட்டார்; கேலி பேசப்பட்டார்.
சக வயதுடையவர்களுடன் பழகினால் மன அழுத்தமே அதிகமாகுமென்று வயது குறைந்த குழந்தைகளோடு நிக் பழக வைக்கப்பட்டார். அது அவர் வாழ்க்கையையே மாற்றியது. ஆம், குழந்தைகள் அவனது பேச்சுக்கு மதி மயங்கி நின்றனர். பேசி... பேசி... உலகையே மாற்றும் அளவிற்கு ஒரு மாபெரும் பேச்சாளராக மாறினார். ஆம், இன்று ஒரு சாதனை மனிதனாக தன்னம்பிக்கை சொற்பொழிவு ஆற்றும் சாதனையாளராக மாறியிருக்கிறார் நிக்.
நிக்கிடம் கை, கால்கள் மற்றும் விரல்கள் இல்லையே ஒழிய வேறென்ன இல்லை. உள்ளத்தளவில் உலகில் உள்ள அனைத்து மக்களைப் போற்றும் அனைத்து உணர்வுகளும் உள்ள ஒரு சராசரி மனிதன் தான்.
நிக் பேசுவதை நீங்களும் கேட்டுப் பாருங்களேன். “எனக்கு இப்போது வயது 26. 15வது வயதில் பைபிளில் ஒரு வசனம் படித்தேன். ‘கடவுளானவர் இந்த உலகுக்குச் செய்ய வேண்டியதை ஒரு கண்ணிழந்தவன் மூலமாகவோ அல்லது என்னைப் போன்ற ஒரு அசாதாரணப் பிறவி மூலமாகவோ தான் செவ்வனே செய்து முடிக்கிறார்’ என்பதை உணர்ந்து கொண்டேன்.
நான் அந்த பாக்கியம் பெற்றுவிட்ட ஒரு பிறவியாகவே நினைத்து பெருமிதம் கொண்டேன். என் வாழ்க்கையை நான் இந்த உலகத்துக்காக ஒப்புக் கொடுத்துவிட்டேன்.
முதலில் நான் பொருளாதாரத் தன்னிறைவு பெற்றுவிடுவேன். நான் சேவை செய்வதற்கு நானே என் சொந்தச் சம்பாத்தியத்தில் நிற்பேன். எந்த உதவியையும் நான் பிறரிடமிருந்து எதிர்பாராது, ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லக்கூட எனக்கென்று ஒரு வாகனமும், அதை நானே ஓட்டும் படியும் அமைத்துக் கொள்வேன்’.
நான் ஒரு சுயமுன்னேற்றப் பேச்சாளன். பல நிறுவனங்களில் என்னைச் சிறப்பு பேச்சாளராக அழைத்துப் பேச வைத்திருக்கிறார்கள். எனது வாழ்க்கையின் சுவாரஸ்யங்களையும், சாதனைகளையும், கடந்து வந்த பாதைகளையும் பேசி முடிக்கும்போது அவர்களின் மனதில் இருக்கும் தாழ்வு மனப்பான்மைகள் தரைமட்டமாவதை கண்கூடாகப் பார்த்து பிரமித்துப் போயிருக்கிறேன்.
என் சொற்பொழிவு இந்த உலகம் முழுவதும் ஒலிக்கப்பட வேண்டும். என் வாழ்க்கை முழுவதும் ஏழை, எளிய மக்களும், மனதால் ஊனப்பட்டு, மன அழுத்தத்தால் வாடி, தவறான பாதைகளில் போதை பழக்கங்களுக்கு அடிமையாகி, எதிர்காலம் இருண்டு நிற்கும் ஒவ்வொருவருக்கும் நான் சேவை செய்வதற்காகக் காத்திருக்கிறேன். இவை தான் என் கனவு, லட்சியம், ஆத்ம திருப்தி எல்லாமே. நான் பிறந்த பலனை முழுமையாக உணர்கிறேன். இவற்றோடு நான் கை இல்லை, கால் இல்லை, கவலை இல்லை’ என்ற நூலும் எழுதியிருக்கிறேன்.
கடவுளின் படைப்புகள் எப்போதுமே வீணடிக்கப்படுவதில்லை. துயரமான நேரங்கள் உருவாவதில்லை. உருவாக்கப்படுகின்றன. எதையும் சரியான கண்ணோட்டத்தில் பாருங்கள். வலி என்பது நிரந்தரம் அல்ல. வாழ்க்கை தான் நிரந்தரம்.
நமது வாழ்க்கை என்பது பாலைவனத்தில் பயன்படும் சிறிது நேரச் செருப்பு, அதனை பயனுள்ளதாக வாழ்வோமே. அவமானங்களை, வேதனைகளை தூக்கியெறியுங்கள். நேற்றைய நிகழ்வுகளைச் சந்தித்தவன் நான் இல்லை. அவன் வேறொருவன் என்று நினைத்து ஒவ்வொரு நாளும் காலை எழும்போது புதிதாகப் பிறந்ததாய் எண்ணிப் புதுப்பயணத்தை தொடருங்கள்.
உங்களிடம் என்ன இருக்கிறதோ அதை நம்புங்கள். அதில் கவனம் செலுத்துங்கள். வெற்றியடைவீர்கள். என்ன திறமை இருக்கிறதெனத் தேடிப் பார்க்காதீர்கள். உங்கள் திறமையில் நம்பிக்கை வைப்பதைவிட, தேவையில் நம்பிக்கை வையுங்கள். அதை எளிதில் அடைவீர்கள். நீங்கள் ஏதாவது சாதிக்க நினைத்தால் அதற்காகத்தான் உங்களை கடவுள் இங்கே அனுப்பியிருக்கிறார் என்றே நம்புங்கள்.
நான் இப்படியொரு ஊனமாகப் பிறந்ததற்குப் பெருமைப்படுகிறேன். காரணம் எனது வாழ்க்கையை இந்த உலகத்தோடு பகிர்ந்து கொள்வதன் மூலம் எத்தனையோ சகோதர சகோதரிகளை மனதளவில் நல்வழிப்படுத்தியிருக்கிறேன
ஆனால் இந்த உலகத்தில் மனதளவில் ஊனப்பட்ட எத்தனையோ பரிதாபத்திற்குரிய என் தோழமைக்கு உரியவர்களை மாற்றியிருக்கிறேன். மறுவாழ்வு வாழ வைத்திருக்கிறேன். எல்லோரையும் மாற்ற முடியாது. அதனால் சிலரையாவது மாற்ற முயல்கிறேன். உங்களை என்னால் மாற்ற முடியும்”.
நிக்கின் தன்னம்பிக்கை வார்த்தைகளை கேட்டீர்களா, இவரது வாழ்க்கையை விட வேறு தன்னம்பிக்கைப் பாடம் வேண்டுமா என்ன? இவரைவிட வலியை உணர்ந்தவரும், அந்த வலியில் இருந்த மீண்டவரும் எவரும் உண்டா? இவரது சோகங்களுக்கு முன்னே மனிதகுலத்தின் சோகம் தூசு தானே...