செவ்வாய், 4 டிசம்பர், 2012

கொஞ்சம் சிரிப்பு

மாணவன் 1 : நம்ம தமிழ் வாத்தியாரை யாரோ அடிச்சுட்டாங்களாமே?

மாணவன் 2 : யாரோ இங்கே தமிழாசிரியர் யாரு ??? என்று கேட்டதுக்கு அடியேன்!!அடியேன்!! என்று பதில் சொல்லியிருக்காரு அதுதான் !?!?

ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ..


________________________________________________________________________________

ஆப்பிள் அழுது கொண்டு இருக்கிறது

வாழைப்பழம்: ஏன் அழுகிறாய்?

ஆப்பிள்: எல்லாரும் என்னை கட் பண்ணி சாப்பிடுறாங்க!!

வாழைப்பழம்: நீ பரவாயில்லை. என்னை எல்லாரும் என்னோட
டிரஸ்ஸ அவிழ்த்துவிட்டு சாப்பிடுறாங்க!!


_______________________________________________________________________________

நர்ஸ் : டாக்டர் இரண்டு தடவை மயக்க ஊசி போட்டும் மயங்கி விழலை.

டாக்டர் : ஊசியோட விலையைச் சொல்லு. உடனே மயங்கி விழுந்து விடுவார்.


_______________________________________________________________________________

மனைவி: என்னங்க நான் செத்துப்போயிட்டா… என்ன பண்ணுவீங்க?

கணவன்: எனக்கு பைத்தியமே புடிச்சுரும்!

மனைவி: நான் செத்தா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா?

கணவன்: பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும்!!

ஹி ஹி ஹி ஹி ஹி ஹீ ..


______________________________________________________________________________

கணவன்: எனக்கு operation முடிஞ்சபின் ஏதாச்சும் ஆச்சுனா நீ doctorஐ கல்யாணம் பண்ணிக்கோ!

மனைவி: ஏங்க இப்படியெல்லாம் பேசுறீங்க?
 

 கணவன்: எனக்கு அவனை பழிவாங்க வேற வழி தெரியல!!!.............

ஹா ஹா ஹா ஹா ஹா ..
 
 
 


______________________________________________________________________________

டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு
ரொம்ப ஜாஸ்தியாம்.

இப்பவாவது தெரியுதா நான் ஏன்
ஜாதகத்தை நம்புறதில்லைன்னு???????

ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ..


______________________________________________________________________________

சசி : டாக்டர் எனக்கு 24 மணி நேரம் தூக்கம் வருது இதுக்கு அலுப்புதான் காரணமா ?
டாக்டர் : இல்ல கொழுப்பு தான் காரணம் !!

ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ..


______________________________________________________________________________

"நாங்கள் ஏழு பேர்கள் ஒரே குடையின் கீழ் நடந்து சென்றோம். ஆனால், ஒருவர்கூட நனையவில்லை." "அதெப்படி?"
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
."மழையே பெய்யவில்லையே"!

ஹி ஹி ஹி ஹி ஹி ஹீ ..
_______________________________________________________________________________
நீதிபதி : உன் கடைசி ஆசை என்ன ?

கைதி : ஒரு கேசுலயாவது எங்க வக்கீலு ஜெயிக்கிரத என் கண்ணால பாக்குற வரைக்கும் என்னைய தூக்குல போடாதீங்க எஜமான்..!
______________________________________________________________________________
என் மகனும் கரண்ட்டும் ஒண்ணு ..

பையன் அவ்ளோ சுறுசுறுப்பா..?

ம்ஹூம் ..

ரெண்டுமே வீட்டுல இருக்கறதில்லை..!

ஹா ஹா ஹா ஹா ஹா ..
_____________________________________________________________________________
தமிழ் டீச்சர்: அவள் நடந்து சென்றாள்.

இந்த வாக்கியத்தை ஆச்சிரியக்குறியுடன் மாற்றுங்கள் பார்ப்போம்

மாணவன்: டேய் மச்சான், figure டா!

ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ..
____________________________________________________________________________
பையன்: எனக்கு வேலை இல்லைனு தெரிஞ்சும் எப்படி நம்ம கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாங்க..

பொண்ணு: பையன் என்ன பண்ணுறான்னு கேட்டாங்க, வயத்துல உதைக்குறானு சொன்னேன்... அதான்....

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ..
________________________________________________________________________________
ஓட்டப்பந்தயத்துல கலந்துக்கப் போறேன் ..
“ ஆசீர்வாதம் பண்ணு பாட்டி. ”

பார்த்து மெதுவா ஓடிப்போ ..,
வேகமாக ஓடி கைய, கால ஓடிச்சுக்கிடாதே.!!

நம்மூர் பாட்டிங்க இப்படித்தான் ஹி ஹி ஹீ ..
_____________________________________________________________________________
பழம் நழுவி பாலில் விழுந்து டம்பளர் உடைந்து போச்சு. ஏன்?

விழுந்தது பலாப்பழம் ஆச்சே ?!

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா .. ளொள் .
_____________________________________________________________________________
ஏண்டா மெதுவா லெட்டர் எழுதுற?

எங்க அப்பாவுக்கு வேகமாக படிக்க வராது, அதான்.!

ஹ ஹ ஹ ஹ ஹ ஹ .. lolz .
____________________________________________________________________________
கணவன் : நம்ம வீட்டுக்கு வந்த திருடன புடுச்சு அடிச்சு, உதச்சு அவன் கை காலெல்லாம் முறிச்சியே, எங்கேந்து வந்தது உனக்கு இ‌வ்ளோ தைரியம்.???

மனைவி : நான் திருடன்னு நினைச்சு அடிக்கலீங்க, நீங்க தான் குடிச்சுட்டு வந்திருக்கீங்கன்னு நினைச்சுதான்.!!!

கணவன் : ?!?!?!

ஹா ஹா ஹா ஹா ஹா ..
____________________________________________________________________________
நண்பன் 1: டேய் மச்சான் நேத்து உங்க வீட்டுக்கு போய் உன்ன எங்கனு கேட்டேன் , அதுக்கு உங்க அப்பா ..

"அந்த மாடு எங்கயாச்சும் மேய போய் இருக்கும்னு சொன்னாரு " எனக்கு ரொம்ப கஸ்டமா போச்சு டா!!

நண்பன் 2: அது கூட பரவாயில்லை மாப்பிள.... நான் திரும்பி போனதும் உன்னைத் தேடி ஒரு "எருமை" வந்துச்சுனு சொன்னாருடா!!

ஹ ஹ ஹ ஹ ஹ ஹ .. lol ..
__________________________________________________________________________
"எங்கப்பா அம்மா சொன்ன பேச்சை நான் சின்ன வயசிலிருந்தே கடைப்பிடிச்சுட்டு வரேன்!"

"அப்படியா..!

சின்ன வயசுல என்ன சொன்னாங்க?

"நீ உருப்படவே மாட்டே'ன்னாங்க!"

ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ .. lolz ..
______________________________________________________________________________
நோயாளி : டாக்டர் வர வர காது சரியாவே கேட்க மாட்டேங்குது!

டாக்டர்: நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க ..
ரெண்டே நாள்ல காய்ச்சல் சரியாகிடும் ..!

ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ .. lolz .
______________________________________________________________________________
காதலி தேவை........

வருகிற ஆண்டு(2013) பெப்பரவரி 14ம் திகதி காதலர் தினத்தை கொண்டடுவதுக்கு ஒரு காதலி தேவை. அதற்காக இப்போதே காதலி தேர்வு செய்ய பட உள்ளது. விரும்பியவர்கள் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு:- அனுபவம் ஏதும் இல்லாதவர் விரும்ப தக்கது.

ஹஹஹஹஹஹஹ..................
______________________________________________________________________________
மனைவி: இந்த வீட்ல ஒண்ணு நான் இருக்கணும் இல்ல உங்க அம்மா இருக்கணும்!

கணவன் : வேலக்காரிய மட்டும் விட்டுட்டு நீங்க ரெண்டு பேரும் எங்கயாவது போயிடுங்க...

ஹி ஹி ஹி ஹி ஹி ஹீ ..
____________________________________________________________________________
ஆசிரியர்: உண்மைக்கு எதிர்பதம் என்னனு கேட்டதற்கு உங்க பையனுக்கு பதில் சொல்ல தெரியலை மேடம் !

அம்மா: அவனுக்கு பொய் சொல்லவே தெரியாது சார் !

ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ..
____________________________________________________________________________
Face Bookகும் ஜெயிலுக்கும் உள்ள ஒற்றுமை...

ரெண்டுமே தெண்டமா உக்காந்துகிட்டு Wallல எழுத வேண்டியது தான்...
____________________________________________________________________________              
நர்ஸ்: "போன்ல உங்களுக்குக் கொலை மிரட்டல் விடுறவன், ஒருவேளை நீங்க ஆபரேஷன் பண்ணுன பேஷண்ட்டுகள்ல யாராவது இருக்குமோ..?"

டாக்டர் : "எனக்குத் தெரிஞ்சு அப்படி யாரும் உயிரோட இருக்கிற மாதிரி தெரியலையே, நர்ஸ்!"


_________________________________________________________________

பெண்ணின் தகப்பனார் : மாப்பிள்ளைக்கு குழந்தை மனசுன்னு சொன்னீங்க.. அதுக்காக இப்படியா..?

தரகர்: ஏன் என்ன பண்ணினாரு?

பெண்ணின் தகப்பனார் : பொண்ணு பார்க்கும் போது 'மாமா பிஸ்கோத்து" வேணும் என்று தட்டுல வச்சிருந்த பிஸ்கட் பாக்கெட்ட கேட்குறாரு..?!?!?

 _________________________________________________________________

முடி வெட்ட வந்த வழுக்கைத் தலைக்காரர், சலூன்காரரிடம் : ஏம்பா, என் தலையிலே தான் முடி ரொம்ப கம்மியா இருக்கு இல்லே. முடி வெட்டறதுக்குப் பாதி பணம் வாங்கிக்கக் கூடாதா?

சலூன் கடைக்காரர் : உங்களுக்கு முடி வெட்டறதுக்காக நான் பணம் வாங்கலே சார். முடியைத் தேடிக் கண்டு பிடிக்கத்தான் பணம் வாங்குறேன்.

_________________________________________________________________

டாக்டர் : "எதுக்கு.. நர்ஸ் மடியில படுத்திருக்கீங்க....?"

பேஷன்ட்: "வசதிப்பட்ட இடத்துல படுத்துத் தூங்கச்சொல்லி நீங்கதானே டாக்டர் சொன்னீங்க...!"

-  அம்பை தேவா, சேரன்மகாதேவி

_________________________________________________________________

 
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக