வெள்ளி, 24 மே, 2013

தன்னம்பிக்கை கனவுகள்

தன்னம்பிக்கை கனவுகள்

விழுவதெனில் விதையாய் விழு
எழுவதெனில் எரிமலையாய் எழு…
உதிர் காலத்தில் உயிர்விட்டால்
வசந்த காலத்தில் வாழவழியேது?
கடிகாரம் சிந்தும் நேரங்களை
நம்பிக்கையுடன் தேடு
என்று நம்பிக்கையுடன் விவரித்துள்ளார் கவிஞர். நமது வாழ்வின் இலட்சியம் நல்லவையாக இருந்தால் செயல்களும் நல்லவையாக அமையும். உயர்ந்த எண்ணங்கள் உலகம் புகழ் பெறச் செய்யும். இலக்கை அடைய தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றிகள் தொடர்ந்து வரும். நல்ல இலக்குகளை நாம் எண்ணும் போது வாழ்க்கையில் வெற்றியும், மகிழ்ச்சியும் உண்டாகும். எனவே இலக்கை அடைய தன்னம்பிக்கையுடன் போராடுவதைப் பற்றி பின்வரும் கட்டுரையில் காண்போம்.
வாழ்வியல் இலக்கு
வாழ்நாள் என்பது உயிர்வாழ இயற்கையால் அனுமதிக்கப்பட்ட நாள். அந்த நாட்களுக்குள் உண்டோம், உறங்கினோம், களித்தோம், காண்போம் என்று மட்டும் வாழ்வது முழுமைபெற்ற வாழ்க்கை ஆகாது. சோதனைகளை எதிர்த்து நின்று, வேதனைகளை விரட்டியடித்துச் சாதனை படைப்பதே நிறைவான வாழ்க்கை.
ஜூடோ கதை ஒன்று உணர்த்தும் தன்னம்பிக்கை பற்றிய விரிவுரைகள்:
ஜூடோ என்பவன் இடது கை இல்லாதவன். ஆனால் அவன் வசித்த நாட்டில் ஜூடோ என்ற அற்புத கலை ஒன்று பயிற்றுவிக்கப்பட்டது. அக்கலையினை அறிந்து கொள்ளவும், பயிலவும் ஜூடோ ஆசைப்பட்டான். ஆனால் அக்கலையினை அவனுக்குக் கற்றுக்கொடுக்க ஒருவரும் முன்வரவில்லை. ஒருநாள் ஒரு குரு ஜூடோவிற்கு ஜூடோ கலையின் ஒரு பகுதியை மட்டும் கற்றுக்கொடுத்தார். அச்சமயம் அந்நாட்டில் இக்கலைக்கான போட்டி ஒன்று நடத்தப்பட்டது. அப்போட்டியில் ஜூடோவும் கலந்து கொண்டான். அவனுக்கு அடிமேல் அடி விழுந்தது. அனைவரும் பார்த்து கலங்கினர். இறுதியாக ஒரே அடியில் எதிராளி தோற்க வியந்த ஜூடோ தன் குருவிடம் கேட்டபோது அந்த குரு சொன்னார், “இக்கலையில் இறுதியாக இடது கையை மடக்கி அடித்தால் எதிராளி ஜெயித்துவிடுவான். ஆனால் உனக்கு இடது கை இல்லாததால் நான் உனக்கு இக்கலையை மட்டும் கற்றுக்கொடுத்தேன்” என்றார்.
இக்கதையின் மூலம் தன்னம்பிக்கையுடன் செயல்பட, வெற்றிபெற ஊனமோ, வயதோ ஒரு தடையல்ல என்பது தெளிவாகிறது. தன்னம்பிக்கை என்பது நம் இதயத்தினுள் முளைவிட்டு நல்ல விளைவைத் தரும்.
இலக்கை அடைய:
இலட்சியமும், கனவும் தான் இலட்சியக்கனவு.
நாம் ஒரு இலட்சியக்கனவை உருவாக்கி நடைமுறைப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். அதனை அடைய தடைகளைத் தகர்த்தெறிந்து எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையோட வாழ வேண்டும்.
தன்னம்பிக்கை முயற்சியின் பரிசு:
கனவை நனவாக்க முயற்சித்து நனவாக்கியவர்கள் பலர். தன்னம்பிக்கையால் ஏற்பட்ட முயற்சியின் விளைவு வெற்றி.
நிலா சோறு உண்ணவே நிலா என்று நினைக்கையில்
நீலவன் கடந்து நிலவை மிதித்தானே நீல்ஆம்ஸ்ட்ராங் - அது தன்னம்பிக்கை
தன்னம்பிக்கையின் மூலம் உயர்ந்தவர்கள்:
1.மின்சார ஒளிவிளக்கு தாமஸ் ஆல்வா எடிசன் - 10,000 முறை தோல்வியுற்று வெற்றி.
2.ஆகாய விமானம் ரைட் சகோதரர்கள் - விடாமுயற்சி வெற்றி
3.ரேடியோ, டி.வி. - மார்க்கோனி - விடாமுயற்சி வெற்றி
4.இந்தியாவின் சுதந்திரம் - மகாத்மா காந்தி - மனஉறுதி வெற்றி
5.கம்ப்யூட்டர் - பில்கேட்ஸ் - தொழில் அறிவு வெற்றி
6.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ். - தன்னம்பிக்கை வெற்றி
எனவே நாம் முன்னேறவும், பிறரை முன்னேற்றவும் நாம் செய்ய வேண்டியது முடிவுற்ற முயற்சியேÐ
அறிந்தது ஒரு துளி; அறியாதது வான்வெளிÐ
என்று தெரிந்ததைத் தெளிவாகத் தெரிந்து கொள்வது சீரான தலைமைப் பண்பாகும். ஆகவே, எண்ணியதை முடித்திட திண்ணிய நெஞ்சமோடு தெளிந்த நல்லறிவும், தன்னம்பிக்கையும் மிக அவசியமாகின்றது.
நிறைவுரை:
கவலையில் கண்களை கசக்காதே
கடைசிவரை களம் கண்டிடு
பாறை என்று பயன் கொள்ளாதே
பாய்ந்து இடுக்குகளில் முளைத்திடு
துணிவே துணை எனக்கொள்Ð
துணிந்தபின் தூக்குமேடையும் துச்சம்கொள்Ð
மார்டின் லூதர் கிங், பாரதியார், அப்துல்கலாம் இவர்களின் கனவும், தன்னம்பிக்கையும் மட்டும் தான் மெய்ப்பட வேண்டுமென்றில்லை வெற்றி பெற நினைக்கும் ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கை இருக்கும்.
கனவு என்பது தூக்கத்தில் வருவதில்லை. உன்னை எது தூங்கவிடாமல் செய்கிறதோ அது தான் கனவு. கண்கள் உறங்கலாம்; கனவுகள் உறங்கக் கூடாது. அப்போதுதான் நம் இலக்கை நாம் அடைய முடியும். படிக்காத மேதை ஒருவர் தன் அறிவாற்றலால் இந்த தமிழகத்தையே ஆண்டாரே காமராசர் அவரிடம் இருந்தது வெறும் தன்னம்பிக்கை மட்டும் அல்ல, துணிவும் தான். அவர் மட்டுமல்ல பல உயர்ந்த நிலையில் இருக்கும் ஒவ்வொருவரும் தன்னம்பிக்கையால் உலகை வென்றவர்கள் ஆவர்.
வெற்றியின் களிப்பு விடியும் வரை
தோல்வியின் மதிப்போ வீழும் வரை
தோல்வியில் ஊரை நீ அறிந்திடு
வெற்றியில் ஊரே உனை அறிந்திடும்
நம்பிக்கை விதையை நடு, தன்னலக் களையை நீக்கு
சிறகை விரி பறக்கப் பழகு

வி. பிரியதர்ஷினி
ஆரல்வாய்மொழி